தூத்துக்குடி

கோவில்பட்டியில் இளைஞர் கைது

கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

DIN

கோவில்பட்டியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய பகுதியில் 2016 இல் நிகழ்ந்த பல்வேறு திருட்டு வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கார்த்திக்ராஜ் (29) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கார்த்திக்ராஜ், கடந்த சில மாதங்களாக வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாராம். ஜூன்3 ஆம் தேதி கோவில்பட்டி குற்றவியல் 2 ஆவது நீதிமன்றம் கார்த்திக்ராஜுக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது. இதனிடையே, காவல் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனராம். அப்போது, அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்ற இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். இதில், அவர் போலீஸாரால் தேடப்பட்டு வந்த கார்த்திக் ராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார்குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT