தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

DIN

சாத்தான்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ்(54).  இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.    அதன்பேரில் உதவி ஆய்வாளர்  லூயிஸ்லாரன்ஸ் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை
அவரது   கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக  மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை  பறிமுதல் செய்தனர்.  இதுதொடர்பாக அற்புதராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT