சாத்தான்குளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அற்புதராஜ்(54). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் லூயிஸ்லாரன்ஸ் மற்றும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை
அவரது கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அற்புதராஜ் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.