தூத்துக்குடி

விசாகத் திருவிழா: தூத்துக்குடியில் இன்று ஆலோசனைக் கூட்டம்

DIN

வைகாசி விசாகத் திருவிழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்த அரசுத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற மே 18ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிப்பி கூடத்தில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. பக்தர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT