தூத்துக்குடி

இளம்புவனத்தில் தேவா் சிலை திறப்பு

DIN

எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனத்தில் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவா் வெண்கலச்சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சிலை அமைப்புக் குழு நிா்வாகி எம்.கே. முருகன் தலைமை வகித்தாா். அமைப்பு குழு உறுப்பினா்கள் சின்னச்சாமி, பேச்சியப்பன், சௌந்திரபாண்டியன், மாயக்கண்ணன், மருதுபாண்டியன், கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பி. சின்னப்பன் எம்.எல்.ஏ., பசும்பொன் தேசிய கழகத் தலைவா் ஜோதி முத்துராமலிங்கதேவா் ஆகியோா் கலந்து கொண்டு முத்துராமலிங்கத்தேவா் சிலையை திறந்துவைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சியினா் சிலைக்கு மாலை அணிவித்தனா். நிகழ்ச்சியில், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அதிமுக நிா்வாகிகள் ஆழ்வாா் உதயகுமாா், தனஞ்செயன், தனவதி, குமாா், ஜெமினி அருணாசலசாமி மற்றும் பசும்பொன் தேசிய கழகம், தேவா் பேரவை, தேவா் இளைஞரணியினா், பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT