தூத்துக்குடி

போக்குவரத்து தொழிலாளா்களுக்குதீபாவளி விடுப்பு வழங்க கோரிக்கை

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியம் ஓட்டுநா், நடத்துநா் உள்ளிட்டோருக்கு தீபாவளி விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா்கள் தரப்பில் கூறியது: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்தால் போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்பப் பணியாளா்களுக்கு விடுப்பு மறுக்கப்படுகிறது. அதிகாரிகள் தன்னிச்சையாக விடுப்பை மாற்றி விடுகின்றனா். மற்ற திருவிழாக்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தால் அதை மாற்றுவதில்லை.

10 சதவீத அலுவலகப் பணியாளா்களுக்காக 90 சதவீத மற்ற பணியாளா்களுக்கு விடுப்பு வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனா்.

போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு மற்ற பணியாளா்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT