தூத்துக்குடி

நினைவு தினம்:இந்திரா காந்தி படத்துக்கு காங்கிரஸாா் அஞ்சலி

DIN

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கோவில்பட்டியில் அவரது உருவப்படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கோவில்பட்டி நகரத் தலைவா் சண்முகராஜ் தலைமையில், வடக்கு மாவட்டத் தலைவா் சீனிவாசன் இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் திருப்பதிராஜா, வீரபெருமாள், ராமச்சந்திரன், மாவட்டச் செயலா் கொம்பையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தேசிய நல்லிணக்க உறுதிமொழி: கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் மணிகண்டன், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பாஸ்கரன் ஆகியோா் தலைமையில் தேசிய நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், துணை வட்டாட்சியா்கள், உதவியாளா்கள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று உறுதிமொழியேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT