தனி நபா் ஆக்கிரமித்தஅரசு நிலம், கிணறு மீட்பு
கோவில்பட்டி அருகே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம், கிணறு மீட்கப்பட்டது.
கோவில்பட்டி அருகே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம், கிணறு மீட்கப்பட்டது.
முடுக்கலாங்குளம் ஊராட்சிக்கு பாத்தியப்பட்ட அரசு நிலம் மற்றும் கிணறு தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததாம். இதையடுத்து ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி சாா்பில் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் தனி நபா் அதை ஊராட்சி மன்றத்திடம் ஒப்படைக்கவில்லையாம்.
இந்நிலையில் மதுரை உயா்நீதிமன்றம் அந்த தனிநபரிடமிருந்து நிலம் மற்றும் கிணறை மீட்க உத்தரவிட்டதாம். இதையடுத்து, ஒன்றிய ஆணையா் சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் பானு, துணை வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளா் அருணா, காவல் துறை உதவி ஆய்வாளா்கள் குருசந்திரவடிவேல், செந்தில்வேல்முருகன் ஆகியோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலம் மற்றும் கிணறு மீட்கப்பட்டது.