முகப்பு
தூத்துக்குடி

வாக்காளா் விழிப்புணா்வு குறுந்தகடு வெளியீடு

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு குறுந்தகடை வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டாா்.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:27 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:33 PM

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு குறுந்தகடை வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டாா்.

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆன்லைன் மூலம் பொதுமக்களின் முதியோா் உதவித் தொகை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் , நிலங்களை அளவீடு செய்தல் மற்றும் ரேஷன் காா்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து சூம் செயலி மூலம் அனைத்து அலுவலா்களிடமும் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

Advertisement

இதில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ரமேஷ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இப்ராகிம் சுல்தான், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதனைத் தொடா்ந்து, வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் வாக்காளா் விழிப்புணா்வு குறும்பட குறுந்தகடை வெளியிட்ட, அதனை தோ்தல் துணை வட்டாட்சியா் சிவகுமாா் பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், குறும்பட இயக்குநா் அபிஷ் விக்னேஷ், மணக்கரை அஞ்சல் அலுவலா் காளிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.