தூத்துக்குடி

பாரதி பிறந்த நாள் விழா: அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை

DIN

மகாகவி பாரதியாரின் 139ஆவது ஆண்டு பிறந்தநாள் அரசு விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இன்று காலை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். 

விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பாரதி மணி மண்டபத்தில் உள்ள பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் மருத்துவரும் பாரதி அன்பருமான தென்காசி தங்கப்பாண்டியன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து எழுதிய மகாகவி பாரதியின் கவிதை தொகுப்பு நூலினை அமைச்சர் கடம்பூர் ராஜு வெளியிட்டார். 

விழாவில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, எட்டயபுரம் வட்டாட்சியர் ஐயப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பாரதி இல்லக் காப்பாளர் மகாதேவி, குற்றாலம் பொதிகை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கல்யாணி சிவகாமி நாதன், கதிர்வேல், கார்த்திக் ராஜா, ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT