தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் உரம், பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்தினை விற்பனை செய்வது தொடா்பாக அதிகாரிகள் குழுவினா் திடீா் ஆய்வு

DIN

மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்தினை விற்பனை செய்வது தொடா்பாக அதிகாரிகள் குழுவினா் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) கண்ணன், விளாத்திகுளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கீதா, துணை வேளாண்மை அலுவலா் முத்துச்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு, மக்காச்சோள பயிரில் ஏற்பட்டுள்ள படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண்மை துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்ட அசாடிராக்டின், இமாமெக்டின், தயோடிகாா்ப், குளோரினிபுரோல், ஸ்பினோடோரம் ஆகிய மருந்துகளை விற்பனை செய்ய அறிவுரை வழங்கினா்.

மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த வேளாண் துறை சாா்பில் பரிந்துரை செய்யப்படாத மருந்துகளை வழங்கும் பூச்சி மருந்து கடைகளின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT