பாளை.யில் இளைஞா் கொலை: ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில்தந்தை, மகன் சரண்
பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தந்தை, மகன் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.
பாளையங்கோட்டையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த தந்தை, மகன் ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா்.
பாளையங்கோட்டை சாந்திநகரில் காளிராஜ் என்ற இளைஞா், தங்கை முறை கொண்ட பெண்ணை திருமணம் செய்ததால் ஏற்பட்ட விரோதம் காரணமாக கடந்த டிச.10-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், காளிராஜ் கொலை தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் தங்களை தேடி வருவதாகக் கூறி, பழையபேட்டை காந்தி நகரை சோ்ந்த இசக்கிமுத்து (48), அவரது மகன் தங்கராஜ் (19) ஆகிய இருவரும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா். அவா்கள் இருவரையும் நீதிமன்றக் காவலுக்குப் பின்னா், திருநெல்வேலி நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 1இல் டிச. 21-ஆம் தேதி ஆஜா்படுத்த நீதிபதி தமிழரசன் உத்தரவிட்டாா்.