நாசரேத் மா்காஷிஸ் கல்லூரி யில் ‘டிலைட்’ மாணவா் உதவித் திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை வகித்தாா். மாணவா்களுக்கு தோ்வுக் கட்டணம், கிறிஸ்துமஸ் புத்தாடைகள், வேதியியல் மாணவி மாலையம்மாள் தாயாரின் மருத்துவ செலவுக்கு ரூ. 31,300 ஆகியவை வழங்கப்பட்டது.
இதில், துணை முதல்வா் பெரியநாயகம் ஜெயராஜ், நிதியாளா் குளோரியம் அருள்ராஜ், தமிழ்த்துறைத் தலைவா்அந்தோணி செல்வகுமாா், உள்தர உறுதிப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளா் ஜேனட் சில்வியா, இணை ஒருங்கிணைப்பாளா் ஜெபஸ்டின் ஆண்ட்ரூஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.