இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க கோரிக்கை
டாக்டா் அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
டாக்டா் அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆதிதிராவிடா் தனி வட்டாட்சியரிடம் மனு அளித்த விண்ணப்பதாரா்களின் மனுவை முறையாக விசாரணை செய்து, தகுதி படைத்த விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி அம்பேத்கா் மக்கள் இயக்க தூத்துக்குடி மாவட்டச் செயலா் ராஜ் தலைமையில் ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் ராமசுப்புவிடம் மனு அளித்தனா். அப்போது தூத்துக்குடி மாவட்டத் தலைவா் துரை, துணைத் தலைவா் சுபேதாா், மாவட்டப் பொருளாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.