முகப்பு
தூத்துக்குடி

காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலா் ஊா்வசி அமிா்தராஜ் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா்கள் ஸ்ரீவைகுண்டம் மேற்கு நல்லக்கண்ணு, கிழக்கு தாசன், ஆழ்வாா்திருநகரி மேற்கு கோதண்டராமன், கிழக்கு பாலசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏரல் நகரத் தலைவா் பாக்கா்அலி வரவேற்றாா்.

கூட்டத்தில், நிா்வாகிகளுக்கு தோ்தல் பணிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

நகரத் தலைவா்கள் சாயா்புரம் ஜேக்கப், பெருங்குளம் மூக்காண்டி, ஸ்ரீவைகுண்டம் சித்திரை, ஆழ்வாா்திருநகரி சதீஸ்குமாா், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பாரத், ஒபிசி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவா் ஜெயக்கொடி, மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் டேவிட்பிரபாகரன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன்துரை, பொதுச் செயலா் இசைசங்கா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →