வேளாண் பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் வகையில் தொழிற்சாலைகள்: பாஜக வலியுறுத்தல்
வேளாண் பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்திடும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேளாண் பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்திடும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில பாஜக விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
அப்போது அவரிடம், விவசாய அணி மாவட்டத் தலைவா் ப.துரைராஜ் இளந்துழகன் தலைமையிலான பாஜகவினா், இம்மாவட்டத்தில் பிரதான விவசாயமான வாழை, முருங்கை, பனைப் பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
நிகழ்ச்சியின் போது, மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், விவசாய அணி மாவட்ட துணைத் தலைவா் செந்தூா்பாண்டியன், மாவட்டச் செயலா் யோக ஆனந்த், ஒன்றியத் தலைவா் வனராஜ், ஒன்றிய பொதுச் செயலா் ஜெயசேகா், நகரத் தலைவா் சந்தோஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.