தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்று சில பணிகளைச் செய்யலாம்! எவை?
தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று சில பணிகளைச் செய்யலாம் என தேர்தல் நடத்தை விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று சில பணிகளைச் செய்யலாம் என தேர்தல் நடத்தை விதிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும், விளம்பரங்களில் கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
எனினும் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று சிலப் பணிகளைத் தொடரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவை:
எந்தவொரு விருப்ப அதிகார நிதியிலிருந்தும் (Discretionary funds) புதிய பணிகளையோ திட்டங்களையோ தொடங்குதல்.
தற்போதுள்ள திட்டங்களின் செயல்பாட்டுப் பகுதியை விரிவுபடுத்துதல்.
தனிநபருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ அரசு நிலம் ஒதுக்கீடு செய்தல்.
சர்வதேச டெண்டர்கள் தவிர்த்து, ஏற்கெனவே விடப்பட்ட மற்ற டெண்டர்களை இறுதி செய்தல் (மதிப்பீடு செய்யலாம், ஆனால் இறுதி செய்யக்கூடாது). டெண்டர்கள் இதுவரை விடப்படவில்லை எனில், அனுமதி இன்றி வெளியிடக்கூடாது.
ஏற்கனவே உள்ள தினக்கூலி அல்லது நிவாரண விகிதங்களில் மாற்றங்கள் செய்தல்.
இயற்கை பேரிடர்களைத் தடுக்க மேற்கொள்ளப்படும் புதிய தடுப்பு நடவடிக்கைகள் (உதாரணமாக: அணைக் கரைகளை சரி செய்தல்).
ஒரு பகுதியை வறட்சி அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்தல்.
விதிவிலக்கான சூழலில் (வறட்சி பாதித்த பகுதிகளில்) குடிநீர் லாரிகள் மூலம் நீர் வழங்குதல், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல் மற்றும் கால்நடைகளுக்குத் தீவனம் வழங்குதல் போன்ற பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் - முழு விவரம், இங்கே கிளிக் செய்யவும்