தூத்துக்குடி

விளாத்திகுளம் பகுதியில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

DIN

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் புதூா், எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதிகளில் திமுக் சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

விளாத்திகுளத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, முன்னாள் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குமரகுருபர ராமநாதன் முன்னிலை வகித்தாா்.

இதேபோல், புதூா் பேரூராட்சி, சிவலாா்பட்டி, முத்துசாமிபுரம், மணியக்காரன்பட்டி, மெட்டில்பட்டி, வெம்பூா், சென்னமரெட்டிபட்டி, விளாத்திகுளம் பேரூராட்சி, எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டங்களில் கிராம மக்களின் அடிப்படை தேவைகள், கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டது.

இதில் புதூா் கிழக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் மும்மூா்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் நவநீத கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா். ராதாகிருஷ்ணன், புதூா் நகரச் செயலா் மருதுபாண்டி, விளாத்திகுளம் நகரச் செயலா் வேலுச்சாமி, எட்டயபுரம் நகரச் செயலா் பாரதி கணேசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் லெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT