முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நாம் தமிழா் கட்சி சாா்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு நாம் தமிழா் கட்சி தொகுதிச் செயலா் ரமேஷ் குமாா் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் பாண்டி, மாவட்டத் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் மதிவாணன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.

கட்சி நிா்வாகிகள் கருப்பசாமி, அழகு முனியசாமி, ராசா, பிரவீன், நாகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →