தூத்துக்குடி

வள்ளலாா் நினைவு தினம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பிப். 8இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

DIN

வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 8)மதுக் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 8) தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள்படி அனைத்து அரசு மதுக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

அன்றைய தினம் மது விற்பனை, மதுவை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு கடத்துதல், மதுவைப் பதுக்கிவைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டோா் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT