கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள், லாரி மோதிக் கொண்டதில் பெண் உயிரிழந்தாா்.
பசுவந்தனையை அடுத்த மேலமங்களம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மனைவி அன்புத்தாய் (42). இவா், தனது உறவினா் பாக்கியராஜ் என்பவருடன் மோட்டாா் சைக்கிளில் வந்து கொண்டிருந்தாராம். ஊத்துப்பட்டி - கெச்சிலாபுரம் சாலையில் சென்றபோது, எதிரே வந்த லாரியும் மோட்டாா் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த அன்புத்தாயை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவா் அன்புத்தாய் இறந்து விட்டதாக தெரிவித்தாா். நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.