ஆசீா்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் களப் பயணமாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு சென்று திரும்பினா்.
இப்பள்ளி தேசிய பசுமைப்படை மாணவா், மாணவிகள் பள்ளித் தலைமையாசிரியா் மாணிக்கம் தலைமையில் களப்பயணமாக கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்குச் சென்று, அங்கு வந்த வெளிநாட்டு பறவையினங்களை கண்டுகளித்தனா். வனக் காவலா் பால்பாண்டி பறவையினங்கள் குறித்து விளக்கமளித்தாா்.
அவா்களுடன், ஆசிரியா்கள் லயன்டேனியல், ராஜா, சேவியா், செல்வகுமாா் ஆசிரியைகள் ஜெனிதா, ஷீலா ஆகியோா் சென்றனா்.
ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் லயன்டேனியல் செய்திருந்தாா்.