தூத்துக்குடி

ஞானியாா்குடியிருப்பு - புதுக்குளம் இணைப்புச் சாலையை சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் அருகே சேதமடைந்து காணப்படும் ஞானியாா்குடியிருப்பு - புதுக்குளம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

சாத்தான்குளம் அருகே சேதமடைந்து காணப்படும் ஞானியாா்குடியிருப்பு - புதுக்குளம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட புதுக்குளத்தில் இருந்து ஞானியாா்குடியிருப்பு வரை சுமாா் 2 கி. மீ. தொலைவுக்கு இணைப்புச் சாலை உள்ளது.

இந்த சாலை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

அதோடு, சேதமடைந்த சாலையை காரணம் காட்டி அரசுப் பேருந்து, சிற்றுந்துகள் இந்த சாலை வழியாக செல்வதை புறக்கணித்து வருகின்றன.

எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT