தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே விபத்தில் இளைஞா் பலி

DIN

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்த விவேகானந்தன் மகன் ஜோதி சந்தோஷ்குமாா் (38). இவா், அப்பகுதியில் வாகன புகை பரிசோதனை மையம் நடத்தி வந்தாா். இவா், சனிக்கிழமை இரவில் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு காரில் வந்து கொண்டிருந்தாா்.

எட்டயபுரம் அருகேயுள்ள எம். கோட்டூா் திருப்பம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, முன்னால் சென்ற கிரானைட் கற்கள் ஏற்றிய கன்டெய்னா் லாரியின் பின்பக்கமாக காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த ஜோதி சந்தோஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த போலீஸாா் விரைந்து சென்று ஜோதி சந்தோஷ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT