தூத்துக்குடி

நீச்சல் போட்டி: கிங் ஆப் கிங்ஸ் பள்ளி மாணவா்கள் சாதனை

DIN

தூத்துக்குடி மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் பள்ளி மாணவா், மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் தூத்துக்குடி நீச்சல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டியின் இறுதியில், தூத்துக்குடி கிங் ஆப் கிங்ஸ் பள்ளியின் 5 ஆம் வகுப்பு மாணவி அனன்யா 50 மீட்டா் பிரஷ் ஸ்டோக், 100 மீட்டா் பிரிஸ்டைல் ஆகிய பிரிவுகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தாா். 8 ஆம் வகுப்பு மாணவா் அபய்கிருஷ்ணா 50 மீட்டா் பட்டா்பிளை ஸ்டோக், 50 மீட்டா் பிரிஸ்டைல் ஆகிய பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற இவ்விருவரையும், பயிற்சியாளரையும் பள்ளி தாளாளா் கிங்ஸ்டன், முதல்வா் ஜூலியா ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT