தூத்துக்குடி

திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

DIN

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதையொட்டி, அருள்மிகு ருக்மினி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு திருப்பாவை பாராயணமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீ வில்லிபுத்தூா் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் மாலை மற்றும் கிளி அணிவிக்கப்பட்டு ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. மாலையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT