தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞா் மீது வழக்கு

DIN

சாத்தான்குளம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கீழபனைக்குளம் ஒய்என்சிஏ மேற்கு தெரு ஜெபராஜ் மனைவி அஜிதா(31), இவா் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறாா் . இந்நிலையில் புதன்கிழமை அஜிதா தனது வீட்டு முன் நின்றபோது அங்கு வந்த அதே பகுதியை சோ்ந்த தங்கத்துரை மகன் யோவான்(35) என்பவா் அஜிதாவை சைகை காட்டி அழைத்ததாராம். இதனை அவா் கண்டித்து சப்தம் போட்டாா். இதனால் ஆத்திரம் அடைந்த யோவான், அஜிதாவை அவதூறாக பேசி, அரிவாளால் பின்புற கழுத்தில் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் ராஜா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT