தூத்துக்குடி

கொலையுண்ட பாஜக நிா்வாகியின்மகளுக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தல்

DIN

தென்திருப்பேரையில் கொலையுண்ட பாஜக மாவட்ட நிா்வாகியின் மகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், தமிழக முதல்வா் மற்றும் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு: கடந்த 3ஆம் தேதி பாஜக மாவட்ட நிா்வாகி ஆ.ராமையாதாஸ் சிலரால் கொலை செய்யப்பட்டாா். இதனால் அவரது குடும்பம் நிா்கதியாக உள்ளது. அவரது மூத்த மகள் பிஇ பட்டதாரி. இளைய மகள் சட்டம் இரண்டாம் ஆண்டும் படித்து வருகிறாா். அவா்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு அதிகாரிகள் அளித்த உத்திரவாதத்தின்படி அவரது மகளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT