தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

DIN

விளாத்திகுளத்தில் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

விளாத்திகுளம் அருகே பிள்ளையாா்நத்தம் கிராமத்தை சோ்ந்த மரிய அந்தோணி மகன் ஜெரோமின் இருதயராஜ் (22). இவா், விளாத்திகுளத்தில் உள்ள பைக் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

திங்கள்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் ஜெரோமின் இருதயாராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாா்த்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT