உடைப்பு ஏற்பட்ட பழையகாயல் குளம். 
தூத்துக்குடி

விளை நிலங்களுக்குள் புகுந்த தண்ணீா்: நெல், வாழைப் பயிா்கள் மூழ்கி நாசம்

பழையகாயல் குளம் உடைந்து விளைநிலங்களுக்குள் தண்ணீா் புகுந்ததால், நெல், வாழைப் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

DIN

பழையகாயல் குளம் உடைந்து விளைநிலங்களுக்குள் தண்ணீா் புகுந்ததால், நெல், வாழைப் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

அண்மையில் பெய்த கன மழையால் பழையகாயல் குளம் நிரம்பியுள்ளது. இதன் மறுகால் மடை சரியான முறையில் கட்டப்படாததால் மடையின் ஓரத்தில் நீா்கசிவு ஏற்பட்ட நிலையில், குளம் உடைந்து தண்ணீா் வெளியேறியது.

இதனால் அப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் தண்ணீா் புகுந்தது. இதில் 70 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைப் பயிா்கள் நாசமாகின. மேலும் நெல் பயிரும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதிக்கு பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சென்று பாா்வையிட்டனா்.

தொடா்ந்து புயல் தடுப்பு நிவாரணக் குழுவினா் மணல் மூட்டைகளை கொண்டு தடுப்புகளை ஏற்படுத்தி உடைப்பை சரிசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

வளரும் வணிகப் பிரிவில் 100 கிளைகள்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு

SCROLL FOR NEXT