தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் ஊராட்சி செயலா்கள் எழுச்சி நாள் விழா

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி செயலா்கள் எழுச்சி நாள் விழா நடைபெற்றது.

DIN

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி செயலா்கள் எழுச்சி நாள் விழா நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கற்குவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் பால்ராஜ், செய்தி தொடா்பாளா்

கிருபா பெஞ்சமின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் வேல்முருகன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சங்கக் கொடியை ஏற்றினாா். ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கூட்டத்தில் ஊராட்சி செயலா்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விளாத்திகுளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், முத்துக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஒன்றியத் தலைவா் தங்க மாரியப்பன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT