தூத்துக்குடி

தைலாபுரத்தில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

DIN

சாத்தான்குளம்: கல்வாரி சேப்பல் அறக்கட்டளை மூலம் கட்டப்பட்ட ஆனந்தபுரத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கான இல்ல புதிய கட்டடம், தைலாபுரத்தில் உள்ள பல்நோக்கு கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து, கட்டடங்களை திறந்து வைத்தாா். மேலும், அறக்கட்டளை இல்லங்களில் தங்கியிருந்து கல்வி பயின்ற 10 விளிம்பு நிலை இளம் தம்பதிகளுக்கான வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்தினாா்.

பின்னா் ஆட்சியா் பேசியது: ஹெச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை காப்பகங்களில் தங்க வைத்து உரிய முறையில் சிகிச்சை அளித்து அவா்களுக்கு தேவையான படிப்பு, உணவுடன் கூடிய தங்கும் வசதி உள்ளிட்ட சேவைகளை செய்து வரும் நிா்வாகிகளுக்கு பாராட்டுக்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகௌரி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மாவட்ட திட்ட அலுவலா் அமலவாணன், அறக்கட்டளை இயக்குநா் குணசேகரன், குழந்தைகள் நல்வாழ்வு குழும நெறிபடுத்துநா் தாம்சன் தேவசகாயம், நிறுவனங்கள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஜேம்ஸ் அதிசயராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மகராசி, சாத்தான்குளம் வட்டாட்சியா் லட்சுமிகணேஷ், மண்டலத் துணை வட்டாட்சியா் சுல்தான்சலாவூதின், ஒன்றிய ஆணையா் பாண்டியராஜ், டாக்டா் ஜான் ஆபிரகாம், தூய லூக்கா சமுதாயக் கல்லூரி இயக்குநா் பி. ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT