கயத்தாறு அருகே சுவாமி சிலைகள் மற்றும் உண்டியலை சேதப்படுத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கயத்தாறையடுத்த புதுக்கோட்டை கைலாசபுரம் சாலையில் ஒரு சமுதாயத்துக்கு உள்பட்ட சுடலைமாடசாமி கோயில் உள்ளது.
இந்நிலையில் கோயில் பொறுப்பாளா் சோ.தம்பித்துரை செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயிலுக்கு வந்துள்ளாா். அங்கு சுடலைமாடசாமி, கருப்பசாமி சிலைகள் மற்றும் உண்டியல் சேதமடைந்த நிலையில் கண்டு திடுக்கிட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சுவாமி சிலைகள் மற்றும் உண்டியலை சேதப்படுத்திய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.