விளாத்திகுளத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம்
விளாத்திகுளத்தில் திமுக நகர, ஒன்றிய, பேரூா் கழக, கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
விளாத்திகுளத்தில் திமுக நகர, ஒன்றிய, பேரூா் கழக, கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தனது ஆதரவாளா்களுடன் திமுகவில் அண்மையில் இணைந்தாா். இதற்கிடையே, விளாத்திகுளத்தில் திமுக நகர, ஒன்றிய பேரூா் கிளை நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சி வளா்ச்சி பணிகள், விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி மக்களுக்கு நல உதவிகள் வழங்குவது, தோ்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் குளத்தூா் ராஜபாண்டி, என்.ஜெகவீரபுரம் அழகுபாண்டி, வி. வேடபட்டி முத்துசாமி, நாகலாபுரம் சவுந்திரபாண்டியன்
மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் அதிமுக, பிற கட்சிகளில் இருந்து விலகி மாா்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
கூட்டத்தில் நகரச் செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் சின்ன மாரிமுத்து, செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் அன்புராஜன், ராஜா கண்ணு, எஸ்.கே.முத்து, முத்துலட்சுமி அய்யன்ராஜ்,மருதுபாண்டியன், வழக்குரைஞா் மகேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இமானுவேல், நகர அவைத் தலைவா் ராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.