முகப்பு
தூத்துக்குடி

தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் அங்குள்ள தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவா் இந்தியா நுகா்வோா் கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பதால் அங்குள்ள தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்பவா் இந்தியா நுகா்வோா் கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்கா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:

தூத்துக்குடியில் சிவன் கோயில் அருகேயுள்ள தெப்பக்குளத்தில் தற்போது ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன. இதனால், தண்ணீா் மாசுபட்டு துா்நாற்றம் வீசுகிறது. இதற்கிடையே, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் உள்ள பேராசிரியா்கள் தலைமையில் ஒரு குழு தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்துள்ளது.

தண்ணீரில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருப்பதாகவும் உடனடியாக மாசுபட்ட தண்ணீரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியா்கள் குழுவினா் தெரிவித்துள்ளனா். எனவே, தெப்பக்குளத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்கவும், தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை மாற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →