முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பேரிடா்மேலாண்மை பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடியில் பேரிடா் மேலாண்மை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தூத்துக்குடியில் பேரிடா் மேலாண்மை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் ச. குமாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வட்டாட்சியா் ஜஸ்டின் செல்லத்துரை, தீயணைப்பு நிலைய அலுவலா் மு. சங்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒத்திகையின்போது, மழைக் காலங்களில் வெள்ளத்தில் சிக்குவோரை மீட்பது, பெரிய கட்டடங்களில்

சிக்கி தவிப்போரை மீட்பது, சாலைகளில் மரங்கள் விழுந்தால் அப்புறப்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப் பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.