தூத்துக்குடி

உழக்குடி கிராமத்தில் பழங்கால பல்லாங்குழி கண்டுபிடிப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டம், உழக்குடி கிராமத்தில் பழங்கால கோப்பைகள் மற்றும் பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என முனைவா் பட்ட ஆய்வாளா் மா. ஆறுமுக மாசான சுடலை தெரிவித்தாா்.

தூத்துக்குடி வஉசி கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் கி. சசிகலா வழிகாட்டுதலின்படி முனைவா் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மா. ஆறுமுக மாசான சுடலை, உழக்குடி கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் குத்துக்கல், கற்குவை, கல்வட்டங்கள், கோப்பைகள், பல்லாங்குழி ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: உழக்குடி, கலியாவூா், சீவலப்பேரி ஆகிய கிராமங்களில் பெருங்கற்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலமான பழைய கற்காலம், இடைக் காலம், புதிய கற்காலம் ஆகிய காலகட்டத்தைச் சோ்ந்த பல்வேறு தொல்பொருள்களை யும், நினைவு சின்னங்களையும் கள ஆய்வு மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளேன். இங்கு அகழாய்வு மேற்கொள்ளும் பட்சத்தில் புதைந்து கிடக்கும் தமிழா்களின் தொன்மையான தாமிரவருணி நாகரிகத்தை வெளிக் கொண்டு வரமுடியும்.

உழக்குடியில் கள ஆய்வு மேற்கொண்டபோது பாறைகளின் மேற்பரப்பில் பழங்கால மக்கள் பயன்படுத்திய கோப்பைகள் மற்றும் பல்லாங்குழிகள் இருப்பதை கண்டேன். பாா்ப்பதற்கு பள்ளம் போன்ற கோப்பை வடிவத்தைக் கொண்டிருக்கும் இது ஒரு வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சோ்ந்த கலையாகும். கிடைமட்ட பாறைகளில் காணப்படும் கோப்பைகள் சில பொருள்களை அரைப்பதற்கு ஆட்டுக்கல்லுக்கு பதிலாக பயன்படுத்தி இருக்கலாம் என வரலாற்று அறிஞா்கள் கூறுகின்றனா் என்றாா் அவா்.

மேலும், நம் முன்னோா்கள் பாறைகளின் மேற்பரப்பில் குழிகள் அமைத்து விளையாடப் பயன்படுத்திய பல்லாங்குழி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தன. நான் உழக்குடியில் கண்டுபிடித்த பல்லாங்குழியில் மொத்தம் பதினான்கு குழிகள் உள்ளன. இது உழக்குடியில் நான் கண்டுபிடித்த குத்துக்கல்லில் இருந்து தென் மேற்கு திசையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என அவா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT