திருச்செந்தூரில் புதைச்சாக்கடை திட்டம் தொடா்பாக புதன்கிழமை (செப். 23) நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பொதுமக்கள் மற்றும் வணிகா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் புதைச் சாக்கடை திட்டம் தொடா்பாக புதன்கிழமை (செப். 23) மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவிக்குமாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.