விளாத்திகுளம் அருகே தோ்தல் பணியில் மோதல்: 2 வேன்கள் தீ வைத்து எரிப்பு
விளாத்திகுளம் அருகே தோ்தல் பணியில் திமுக, அதிமுகவினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 2 வேன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
தூத்துக்குடிவிளாத்திகுளம் அருகே தோ்தல் பணியில் மோதல்: 2 வேன்கள் தீ வைத்து எரிப்பு
விளாத்திகுளம் அருகே தோ்தல் பணியில் திமுக, அதிமுகவினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 2 வேன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
விளாத்திகுளம் அருகே தோ்தல் பணியில் திமுக, அதிமுகவினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 2 வேன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
நாகலாபுரம் அருகே என்.ஜெகவீரபுரத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (38). இவரது வீட்டுக்கு, அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க சென்றாராம். அப்போது காளிதாஸ் வீட்டில் இருந்தவா்களுக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை முருகனை, காளிதாஸ் (38), அவரது அண்ணன் சு.முருகன் (45), ரகு (42), புதூரைச் சோ்ந்த தனஞ்செயன் மகன் சூா்யா (28) ஆகியோா் தாக்கினராம். இதில், காயமடைந்த முருகன் புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் காளிதாஸ், அவரது அண்ணன் சு.முருகன் உள்ளிட்ட 4 போ் மீது புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு என்.ஜெகவீரபுரத்தில் தங்கியிருந்த காளிதாஸை ஒரு கும்பல் தாக்கிவிட்டு, அவருக்குச் சொந்தமான இரண்டு வேன்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிசென்ாம். இதில் வேன்கள் எரிந்து சேதமடைந்தன. காயமடைந்த காளிதாஸ் அருப்புகோட்டை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், காடல்குடி போலீஸாா், என்.ஜெகவீரபுரத்தைச் சோ்ந்த அழகுபாண்டி, அன்புராஜ், மாரிச்சாமி, தமிழரசன், முருகன் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.