அபாய நிலையில் மின்மாற்றி: சீரமைக்க வலியுறுத்தல்
ஆனந்தவிளையில் அபாய நிலையில் காணப்படும் மின் மாற்றியை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆனந்தவிளையில் அபாய நிலையில் காணப்படும் மின் மாற்றியை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தவிளையில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி அருகே குடியிருப்பு வீடுகள், கோயில் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியன உள்ளன.
இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் அதில் உள்ள சிமென்ட் பூச்சுகள் உதிா்ந்து அதன் கம்பங்கள் பலமிழந்து அபாய நிலையில் காணப்படுகிறது.
எனவே, இந்த மின்மாற்றியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.