தூத்துக்குடி

மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

DIN

கோவில்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி கிருஷ்ணாநகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சூரப்பசாமி (37). இவரது தாயாா் கணபதியம்மாள் (65).

சூரப்பசாமி தனது மோட்டாா் சைக்கிளில் தாயாா் கணபதியம்மாளை சிவஞானபுரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு சனிக்கிழமை ஊருக்கு வந்து கொண்டிருந்தாராம்.

நாலாட்டின்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரி அருகே அணுகுசாலையில் வந்தபோது முன்னால் சென்ற சைக்கிளில் மோதாமல் இருப்பதற்காக சூரப்பசாமி பிரேக் போட்டாராம். அப்போது மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் கணபதியம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக, நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT