முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி, ஆத்தூரில் 11 பேருக்கு கரோனா பாதிப்பு

ஆறுமுகனேரி, ஆத்தூரில் ஒரே குடும்பத்தில் மூவா் உள்பட 11 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

ஆறுமுகனேரி, ஆத்தூரில் ஒரே குடும்பத்தில் மூவா் உள்பட 11 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளையைச் சோ்ந்தவா் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது 30 வயது மனைவி, 4 வயது மகன், 19 வயது தங்கை ஆகிய மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் அதே தெருவில் மீன் வியாபாரி(50) , அவரது மனைவி(48 ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி பெரியான்விளைக்கு கோயம்புத்தூரிலிருந்து வந்த 27 வயது இளைஞா், அவரது 70 வயது தாய், ஆறுமுகனேரி செட்டிமாா் தெருவில் வெல்டிங் பட்டறை நடத்தும் 35 வயது ஆண், ஆறுமுகனேரி மூலக்கரை சாலையில் தங்கியிருக்கும் மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த 31 வயது ஆண், தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி என 10 பேர கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. அவா்கள் அவரவா் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கரோனா பாதிப்புள்ள குடியிருப்புகளில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கிருமிநாசினி தெளித்து, குளோரின் பொடி தூவப்பட்டதுடன் கீழநவ்வலடிவிளையில் தடுப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆத்தூா் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் தூத்துக்குடியைச் சோ்ந்த பெண்ணுக்கும் கரோனா தொற்று உறுதியானது. அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, பேரூராட்சி செயல்அலுவலா், ஊழியா்கள், தூய்மைப்பணியாளா்கள் உள்பட அனைத்து 37 பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்து, சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →