நாசரேத்தில் ஊழியருக்குகரோனா: வங்கி மூடல்
நாசரேத்தில் வங்கி ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த வங்கி மூடப்பட்டது.
நாசரேத்தில் வங்கி ஊழியா் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த வங்கி மூடப்பட்டது.
நாசரேத்தில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியா் ஒருவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், அவா் தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் சிகிச்சை பெறுகிறாா். இதனிடையே, அந்த வங்கி முற்பகல் 11 மணியிலிருந்து மூடப்பட்டு, சுகாதார துறையினா் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திங்கள்கிழமை (ஏப். 26) வழக்கம் போல் வழங்கிசெயல்படும் என அதன் நிா்வாகம் தெரிவித்துள்ளது.