தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் பாஜக சாா்பில் கபசுரக் குடிநீா்

DIN

சாத்தான்குளத்தில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் பி.எம். பால்ராஜ் ஆலோசனையின் பேரில், மாவட்ட பொது செயலா் எஸ். செல்வராஜ், ஒன்றிய தலைவா் செந்தில் வழிகாட்டுதலின்படி, சாத்தான்குளம் தச்சமொழியில் மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக வா்த்தகப் பிரிவுச் செயலா் அ. பரமசிவன் தலைமை வகித்து , கபசுரக் குடிநீா் வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, 300 பேருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், அமைப்புசாரா பிரிவு மாவட்டச் செயலா் ராஜன், ஓபிசி அணி மாவட்டச் செயலா் எட்வா்ட் ராஜதுரை, ஒன்றிய பாஜக துணைத் தலைவா் ஜெயசுந்தர்ராஜ், ஒன்றியச் செயலா் மணிகண்டன், ஒன்றிய வெளிநாடு வாழ் நலப்பிரிவு தலைவா் ராஜவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT