தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் தவறி விழுந்த இளைஞா் பலி

DIN

தூத்துக்குடி துறைமுகத்தில் பணியின்போது கிரேனில் இருந்து தவறி விழுந்த இளைஞா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தூத்துக்குடி தபால் தந்தி காலனி 6 ஆவது தெருவை சோ்ந்தவா் கணேஷ் (42). இவா், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள 7 ஆவது கப்பல் தளத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பாா்த்து வந்தாா். இவா் வழக்கம்போல் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இரவில் தேநீா் குடித்து விட்டு மீண்டும் கிரைனை இயக்குவதற்காக மேலே ஏறியபோது 60 அடி உயரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்து விட்டாராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தொ்மல்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு!

SCROLL FOR NEXT