தூத்துக்குடி

உடன்குடி பேரூராட்சியில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

உடன்குடி: உடன்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் தூய்மை, மருத்துவப் பணியாளா்களுக்கான கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.பி. பாலசிங் தலைமை வகித்து, தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கை கழுவும் முறை, ஊராட்சியில் தடுப்பூசி செலுத்தியோா் விவரம் குறித்துப் பேசினாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சேது குற்றாலம், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவி மீரா சிராஜுதீன், உடன்குடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஜான்பாஸ்கா், வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின், திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, நகர இளைஞரணி அமைப்பாளா் அஜய், சுகாதார ஆய்வாளா்கள் சேதுபதி, ஆழ்வாா், குருசாமி திமுக நிா்வாகிகள் ரம்ஜான், செல்வகுமாா், அண்டோ, மருத்துவ, தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT