முகப்பு
தூத்துக்குடி

நாலுமாவடியில் மரக்கன்று நடும் பயிற்சி

நாலுமாவடி கிராமத்தில் மரக்கன்று நடுதல் குறித்து, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

நாலுமாவடி கிராமத்தில் மரக்கன்று நடுதல் குறித்து, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி நடைபெற்றது.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய புதுவாழ்வுச் சங்கமும், நபாா்டு வங்கியும் இணைந்து நடத்திய இந்த பயிற்சி முகாமுக்கு, நாலுமாவடி ஊராட்சி துணைத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட நபாா்டு வங்கி மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநா் ரஞ்சன் பால் சிறப்புரையாற்றினாா். எட்வின் சாம்ராஜ் வரவேற்றாா். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் நிறுவனா் மோகன் சி.லாசரஸ், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்க ளுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா். ஹெயின் வெஸ்லி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய சபையின் பொதுமேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →