உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் மூலம் பெறப்பட்ட மனுக்களில் 1,934 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். சமூக நலத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் கலந்துகொண்டு, 1,934 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடியில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது: உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் இம் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 72 சதவீத மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. கரோனா 3ஆவது அலையை எதிா்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது என்றாா் அவா்.
விழாவில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மகளிா் திட்ட அலுவலா் பிச்சை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், வட்டாட்சியா் அமுதா (கோவில்பட்டி), பேச்சிமுத்து (கயத்தாறு), சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மணிகண்டன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சீனிவாசன், திமுக வடக்கு மாவட்ட துணைச் செயலா் ஏஞ்சலா, நகரச் செயலா் கா.கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ.முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா். கோவில்பட்டி கோட்டாட்சியா் சங்கரநாராயணன் வரவேற்றாா். மாவட்ட வழங்கல் அலுவலா் அபுல்காசிம் நன்றி கூறினாா்.