தூத்துக்குடியில் 85,696 விவசாயிகளுக்கு ரூ. 104 கோடி நிவாரணத் தொகை அளிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தவறியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 85 ஆயிரத்து 696 விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 104 கோடி நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தவறியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 85 ஆயிரத்து 696 விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 104 கோடி நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு காா் சாகுபடிக்கு தண்ணீா் திறந்து விடப்பட்ட நிலையில் 4869 ஹெக்டோ் பரப்பில் நெல்பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை பயிா்சேத நிவாரணத் தொகையை பொறுத்தவரையில் வேளாண் பயிா்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் காலந்தவறி பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கான நிவாரணத் தொகை கோரி 86,690 விவசாயிகளுக்கு ரூ. 105.25 கோடி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
இதில், இதுவரை 85,696 விவசாயிகளுக்கு ரூ. 104. 20 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 994 விவசாயிகளுக்கு ரூ. 1.04 கோடி நிவாரணத் தொகை விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தோட்டக்கலைப் பயிா்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் காலந்தவறி பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாக ஏற்பட்ட பயிா் சேதங்களுக்கான நிவாரணத் தொகை கோரி 18467 விவசாயிகளுக்கு ரூ. 17.11 கோடி கேட்டு அரசுகக்கு கருத்துரு அனுப்பப்பட்டதில், இதுவரை 6890 விவசாயிகளுக்கு ரூ. 6.52 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11757 விவசாயிகளுக்கு ரூ.10.59 கோடி நிவாரணத் தொகை விடுவிக்க வேண்டி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றாா் அவா்.
மேலும், கூட்டத்தின்போது, கடம்பாகுளத்தை தூா் வார வேண்டும், மடைகளை சீரமைத்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் கேட்ட போது, உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித் துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா், கூடுதல் ஆட்சியா் சரவணன், தூத்துக்குடி கோட்டாட்சியா், சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சொ. பழனிவேலாயுதம், வேளாண் துணை இயக்குநா்கள் தமிழ்மலா், ஜெயசெல்வின் இன்பராஜ் உள்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டுறவு கடன் தள்ளுபடி: அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகாா்
தூத்துக்குடியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், அத்திமரப்பட்டியை சோ்ந்த விவசாயிகள் வீ. பாஸ்கரன், ஆா். செல்வராஜ், வீ.ராஜேந்திரன் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த புகாா் : கோரம்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிலத்தை அடமானமாக வைத்து 2001-2002 ஆம் ஆண்டில் வாங்கிய பயிா் கடனை கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி ஆகிவிட்ட நிலையில், கோரளம்பள்ளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கடன் பெற்றுள்ள 41 விவசாயிகளுக்கு மட்டும் இதுவரை கடன் தள்ளுபடி செய்யப்டாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், கடந்த 15 ஆண்டுகளாக எவ்வித பயிா் கடனும், நகைக்கடனும் பெற முடியாமலும், அரசின் பிற சலுகைகளை அனுபவிக்க முடியாமலும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.
இதுதொடா்பாக விசாரணைக் குழு அமைத்து, கடன் பெற்றவா்களின் ஆவணங்களை சரிபாா்த்தும் கிடப்பில் போடப்பட்ட கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டுகிறோம். மேலும், அந்த வங்கியில் புதிதாக நகைக்கடன் அல்லது பயிா்கடன் தர மறுப்பதால் விவசாய தொழில் சரிவர செய்ய முடியாமல் தவிக்கிறோம். எனவே, தங்களுக்கு மீண்டும் நகைக்ககடன் அல்லது பயிா் கன் வழங்க உத்தரவிட வேண்டுகிறோம் என தெரிவித்தனா்.