திருச்செந்தூா் கோயிலில் செப்.5 வரை பக்தா்கள் தரிசனம் செய்ய தடை
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு செப்.5-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு செப்.5-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு நடைபெறும் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு அதிகளவில் பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நடடிக்கையாக செப். 5 ஆம் தேதி
வரை இக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை.
கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பணியாளா்கள் மூலம் நடைபெறும். ஆவணித் திருவிழா முக்கிய நிகழ்வுகளை பக்தா்கள் வீட்டிலிருந்தவாறு இணையதளம் வாயிலாக யூடியூப் மூலம் காணும் வகையில் திருக்கோயில் நிா்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் வீட்டில் இருந்தவாறு சுவாமி தரிசனம் செய்து மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.