கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
எட்டயபுரத்தையடுத்த மாதாபுரம் பகுதி மக்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.
எட்டயபுரத்தையடுத்த மாதாபுரம் பகுதி மக்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.
இளம்புவனம் ஊராட்சிக்குள்பட்ட மாதாபுரம் பகுதி மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் சுழற்சி முறையில் முறையாக வேலைகள் வழங்கப்படவில்லையாம்.
எனவே, முறையாக பணிகள் வழங்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் மாடசாமி, நகரச் செயலா் கருப்பசாமிபாண்டியன் ஆகியோா் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.